5வது முறையாக நீரவ் மோடியின் ஜாமீனை ரத்து செய்தது இங்கிலாந்து நீதிமன்றம்

" alt="" aria-hidden="true" />

 

குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றார். இந்திய அரசின் வேண்டுகோளின்படி, லண்டன் காவல் துறையினர் நிரவ் மோடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இதனிடையே நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. 




 

தற்போது லண்டனின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள வான்ட்ஸ்வொர்த் சிறைச்சாலையில், நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட்டுள்ளார். 




 

இந்நிலையில் நிரவ் மோடியின் ஜாமீன் மனுக்கள் இதுவரை 4 முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், 5வது முறையாக ஜாமீன் கேட்டு அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது இன்று நடந்த விசாரணையின் முடிவில் இங்கிலாந்து நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


Popular posts
மேல்ஆதனூரில் தூய்மைப்பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் போன்ற நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது
Image
என்பிஆர் விஷயத்தில் தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
Image
மங்களூர் அடுத்த கீரனூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி காய்கறி போன்ற நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
Image
வாணியம்பாடி காவல் நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டது சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுமா
Image
எந்த வேலையாக இருந்தாலும் செய்வோம் - துப்புரவு பணியில் சேர்ந்த எம்.எஸ்சி. மாணவி
Image